search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியப்பா மரணம்"

    சோளிங்கர் அருகே பைக் மோதி 7-ம் வகுப்பு மாணவி பலியான அதிர்ச்சியில் பெரியப்பாவும் இறந்தார்.

    வேலூர்:

    சோளிங்கர் அடுத்த ஜிகுலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 45). கட்டிட தொழிலாளி. இவரது மகள் ஸ்வேதா (12). சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றிரவு வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த மாணவி ஸ்வேதா மீது அந்த வழியாக வேகமாக வந்த பைக் மோதியது.

    இந்த விபத்தில் மாணவி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். மாணவியின் பெற்றோர் மற்றும் பெரியப்பா வீரராகவன், உறவினர்கள் சம்பவ இடத்துக்கு ஓடிவந்தனர். மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    தம்பி மகள் இறந்த துக்கத்தை தாங்கி கொள்ள முடியாத பெரியப்பா வீரராகவன் அதிர்ச்சியில் உறைந்தார். திடீரென மாணவி உடல் அருகே மயங்கி சுருண்டு விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் வீரராகவனை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வீரராகவன் இறந்ததாக கூறினர்.

    ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பி மகள் இறந்த அதிர்ச்சியில் பெரியப்பா உயிரிழந்த சம்பவம் ஜிகுலூர் கிராம மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×